search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆப்கானிஸ்தான் போர்"

    ரம்ஜானை முன்னிட்டு ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனியின் தற்காலிக போர் நிறுத்த அறிவிப்பை ஏற்றுக்கொள்வதாக தலிபான் அமைப்பு இன்று அறிவித்துள்ளது. #AshrafGhani #Taliban
    காபூல் :

    ரமலான் மாதம் இஸ்லாமியர்களின் புனித மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த மாதத்தில் இஸ்லாமியர்கள் அனைவரும் இஸ்லாம் மார்க்கத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் நோன்பு இருந்து இறைவனை வழிபடுவர்.

    இஸ்லாமிய நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தானில் அரசு படைக்கும், தலிபான் பயங்கரவாத அமைப்புகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ரம்ஜானை முன்னிட்டு, அதற்கு முந்திய 5 நாட்கள் தற்காலிக போர் நிறுத்த அறிவிப்பு ஒன்றை ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி சமீபத்தில் அறிவித்தார்.



    இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ரம்ஜான் கொண்டாடப்படும் தினத்துக்கு முன்னதாக 5 நாட்கள் தலிபான்களுக்கு எதிராக நடைபெற்று வரும் உள்நாட்டு போர் நிறுத்தப்படுவதாகவும், இதர வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளான அல் கொய்தா மற்றும் ஐ.எஸ் போன்ற பயங்கரவாதிகளுக்கு எதிரான போர் தொடர்ந்து நடைபெறும் என ஆப்கான் பாதுகாப்பு படைகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் பதிவிட்டிருந்தார்.

    இந்நிலையில், 3 நாள் போர் நிறுத்தத்துக்கு சம்மதிப்பதாக இன்று தலிபான் அமைப்பு அறிவித்துள்ளது. தலிபான் அமைப்பு அறிவித்துள்ள போர் நிறுத்தம் எந்த நாளில் துவங்கும் என்பது குறித்த தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை. #AshrafGhani #Taliban
    ரம்ஜான் நோன்பை முன்னிட்டு ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி தாலிபன் பயங்கரவாதிகளுக்கு எதிரான தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளார். #AshrafGhani #Taliban
    காபூல் :

    ஆப்கானிஸ்தான் ரம்ஜான் நோன்பை முன்னிட்டு தலிபான் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடைபெற்று வரும் உள்நாட்டு போர் 5 நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக அதிபர் அஷ்ரப் கனி அறிவித்துள்ளார். 

    இதுகுறித்து அதிபர் அஷ்ரப் கனி இன்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது :-

    ரம்ஜான் கொண்டாடப்படும் தினத்துக்கு முன்னதாக 5 நாட்கள் தலிபான்களுக்கு எதிராக நடைபெற்று வரும் உள்நாட்டு போர் நிறுத்தப்படுகிறது. அதே சமயம், இன்ன பிற வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளான அல் கொய்தா மற்றும் ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான போர் தொடர்ந்து நடைபெறும் என ஆப்கான் பாதுகாப்பு படைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும், வன்முறை மற்றும் போரினால் மக்களின் மனதை வெல்ல முடியாது. மாறாக பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவது மக்களிடம் இருந்து தலிபான்களை இன்னும் அந்நியப்படுத்தவே செய்யும் என்பதை தலிபான் அமைப்பினர் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு, இந்த தற்காலிக போர் நிறுத்தம் அவர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாகும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

    ஆனால், இந்த போர் நிறுத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா ? இல்லையா ? என்பது பற்றி தலிபான் பயங்கரவாதிகளிடம் இருந்து எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #AshrafGhani #Taliban
    ×